கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா?

மார்ச் 25, 2008

கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா? - New 24/03/2008 முன்னுரை: நம் தமிழ் நாட்டு இஸ்லாமியர்கள்(அறிஞர்கள்) கடந்த ஒரு ஆண்டு காலமாக அதி வேகமாக தளங்களை உருவாக்கிக்கொண்டு இஸ்லாமிய செய்தியை பதித்துக்கொண்டு வருகிறார்கள். கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருகிறார்கள். சிலர் உண்மையை பொய் என்றுச் சொல்கிறார்கள். சிலர் பொய்யை உண்மை என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். இஸ்லாம் தளங்களில் பொய் செய்திகள்:

இவர்களில் சிலர்(கவனிக்கவும் “சிலர்”) பல பொய்யான தகவல்களை கொடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

பல ஆயிரம் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ போதகர்கள் திடீரென்று இஸ்லாமுக்கு மாறினார்கள் என்று மிகவும் ஆவேசமாக கட்டுரை எழுதினார்கள்? ஆதாரம் எங்கே என்றுக் கேட்டால், “மௌனம்”…… பதில் இருக்காது…..

இஸ்லாம் இணையத்திற்கு பதில்: இஸ்லாம் சரியான மார்க்கம் என்று தெரிந்தும் கிறிஸ்தவர்கள் நிராகரிக்கின்றார்களா? – New 24/03/2008

இந்த கட்டுரையில், நாம், “இஸ்லாம் இணைய பேரவை” தளம் எழுதிய ஒரு கட்டுரைக்கான பதிலை காணப்போகிறோம். இந்த கட்டுரையில் இவர்களாகவே சில விஷயங்களை சுயமாக முடிவு செய்துவிட்டு அதை வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் சுயமாக எடுத்த முடிவு என்ன?

1. கிறிஸ்தவர்களுக்கு உண்மை மார்க்கம் இஸ்லாம் என்று தெரியுமாம்

2. அப்படி தெரிந்து இருந்தும், கிறிஸ்தவர்கள் வறட்டு கௌரவத்தால் இஸ்லாமை நிராகரிக்கிறார்களாம்.

[என்னே கண்டுபிடிப்பு! நான் மட்டும் நோபல் யாருக்கு கொடுக்கலாம் என்று நிர்ணயிக்கும் குழுவில் இருந்தால், 2008ம் ஆண்டிற்கான நோபல் பரிசை இந்த கண்டுபிடிப்பிற்காக இதை எழுதவருக்கு கொடுக்க சிபாரிசு செய்வேன்.]

நான் இந்த கட்டுரையில் மேலே குறிப்பிட்ட இரண்டு குறிப்புகளுக்கு மட்டும் பதில் தரலாம் என்று விரும்புகிறேன். அதே நேரத்தில் இவர்களின் வாடிக்கையான கிளிப்பிள்ளை வார்த்தைகளுக்கும் பதில் ஆங்காங்கே சொல்லிவிடுகிறேன்.

Answering IslamKalvi: இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும் – New 17/03/2008

10ம் வகுப்பு படிக்கும் மாணவன் அல்லது மாணவிக்கு ஒரு பரிட்சை:

நான் இந்த யோவான் 2:1-11 வசனங்களை 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கோ, மாணவிக்கோ கொடுத்து, இவ்வசனங்களை படிக்கச்சொல்லி, கீழ் கண்ட சில கேள்விகளுக்கு பதில் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள். இந்த மாண(வி)வன் என்ன பதில் சொல்வா(ள்)ன் என்பதை, இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சிந்தித்துப்பாருங்கள். பிறகு நாம் இஸ்லாமிய அறிஞர் எம். எம். அக்பர் அவர்களின் ஆராய்ச்சியைப்பற்றி சிறிது சிந்திப்போம்.

ஏன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை? – New 10/03/2008 “இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சிகளை” யார் யார் நடத்துகிறார்கள் என்று இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரையும், தமிழ் நாட்டிலுள்ளவர்களையும் கேட்டால், பெரும்பான்மையாக மாற்று மதத்தவர்களும் உடனே பதில் சொல்லிவிடுவார்கள். அதாவது, உலக அளவில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை திரு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் நடத்துகிறார். அதே போல, தமிழ் நாட்டில் (எனக்கு தெரிந்த மட்டில்) புகழ் பெற்ற நிகழ்ச்சியாகிய உள்ள “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற நிகழ்ச்சியை திரு பி. ஜைனுல் ஆபீதீன் அவர்கள் நடத்திக்கொண்டு வருகிறார்கள். இந்த விவரங்கள் எல்லாருக்கும் தெரியும், இன்னும் பல நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்துக்கொண்டு இருக்கின்றன.

சரி, அப்படியானால், இப்படிப்பட்ட கிறிஸ்தவ கேள்வி பதில் நிகழ்ச்சிகளை யார் நடத்துகிறார்கள்? குறைந்த பட்சம் ஒரு பெயரைச் சொல்லுங்கள் ? என்று நாம் கேட்டால் பெரும்பான்மையாக “கிறிஸ்தவர்களிலிருந்தே” பதில் வராது? அது ஏன்? சரி கிறிஸ்தவ போதகர்கள், ஊழியர்களின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டால், உடனே குறைந்தது 10 பேரின் பெயரை அதிகமாக சிந்திக்காமலேயே சொல்லிவிடுவார்கள் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்களுக்கு சந்தேகங்கள் இல்லையா? மாற்று மதத்தவர்கள் கிறிஸ்தவ கேள்விகளை கேட்கமாட்டார்களா? என்ற கேள்விகள் எல்லாருக்கும் எழும்பும்.

Answering Islamkalvi : காபாவிற்குள் கள்ள(அநியாய) வியாபாரம் செய்ய அனுமதியுண்டா?

இஸ்லாம் கல்விக்கு(எம்.எம். அக்பர் அவர்களுக்கு) ஈஸா குர்‍ஆன் மறுப்பு - New 06/03/2008 என்ன கேள்வி இது? மக்காவில் உள்ள காபாவில் மட்டுமல்ல, உலகத்தில் எந்த நாட்டிலும் சரி, கள்ள வியாபாரம், அநியாய வியாபாரத்தை செய்ய இஸ்லாம் அனுமதிப்பதில்லை என்று நீங்கள் சொல்வீர்கள். நீங்கள் சொல்வது உண்மை தான் இதை மனதில் வைத்துக்கொண்டு மேலும் படியுங்கள்.

காபாவில் ஹஜ் சமயத்தில் கீழ் கண்டவாறு கள்ள(அநியாய) வியாபாரம் நடந்தால்?

சுவர்னதென்றலுக்கு பதில்: பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை – New 3/03/2008 “சுவர்ன தென்றல்” என்ற தளம் “சத்தியத் தொடர் -‍ 1″ என்ற கட்டுரையில் “பைபிளில் முகமது பற்றிய தீர்க்கதரிசன வசனங்கள்” உள்ளன, அவைகளை கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் பார்க்க தவறுகின்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது. பைபிளிலிருந்து சில வசனங்களை குறிப்பிட்டு இந்த வசனங்களில் குறிப்பிட்டு இருப்பது “முகமதுவைத் தான்” என்று சுவர்ன தென்றல் தளம் சொல்கிறது. ஏற்கனவே, ஈஸா குர்‍ஆன் தளத்தில் இதைப் பற்றி நான் சில பதில்களை கொடுத்துள்ளேன், அவைகளை “சுவர்ன தென்றலுக்கு” என் பதிலாக முன்வைக்கின்றேன்.

இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் – 1 ,இஸ்லாமிய தளங்களுக்கு பதில்

December 30, 2007

இயேசுவின் பிறப்பு விவரங்கள் – பைபிளிலும் மற்றும் குர்-ஆனிலும்(ஒரு மறுப்புக் கட்டுரை)

தமிழ்முஸ்லீம் என்ற வெப்தளத்தில் ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் ஒரு கட்டுரையை எழுதுயிருந்தார்கள். இயேசுவின் பிறப்பின் விவரங்கள் பைபிளிலும், குர்-ஆனிலும் வேறு வேறுவிதமாக உள்ளது. இவர் குர்-ஆனில் சொன்னவிவரங்கள் தான் சரியானது, பைபிளில் சொன்ன நிகழ்ச்சிகள் சரியானது அல்ல என்று எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கட்டுரைக்கு மறுப்பை இப்பக்கத்தில் காணப்போகிறோம். பைபிளை படிக்காமலேயே அதில் சொல்லிய நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறார் இவர். பைபிளில் அவர் காட்டிய மேற்கோள்கள் தவறாக உள்ளது. பைபிளில் என்ன அதிகாரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று படிக்காமலேயே , இந்த அதிகாரத்தில் இப்படி பைபிளில் சொல்லியிருக்கிறது என்றுச் சொல்கிறார், நம் இஸ்லாமிய நண்பர்.

இவர் எழுதிய 5 தொடர்களில், முதல் தொடரின் மறுப்பையும், பைபிளைப் பற்றிய அவரின் அறியாமைப் பற்றியும் நாம் இக்கட்டுரையில் காணப்போகிறோம். மற்றும் இயேசுவின் பிறப்பைப் பற்றிய விவரங்கள் பைபிளில் சொல்லப்பட்டது தான் சரியானது என்றும் நாம் காணப்போகிறோம். தேவனுக்கு சித்தமானால், அவரின் மற்ற தொடர் கட்டுரைக்கும் (இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட), என்னுடைய விமர்சனங்களை அல்லது மறுப்பை கூடிய சீக்கிரத்தில் காண்போம்.

அவர் எழுதிய கட்டுரையை இங்கு காணலாம் : இயேசுவுக்கு நேர்ந்ததென்ன? – தொடர் – 1 (http://www.tamilmuslim.com/ )

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

ரங்கிப்பேட்டை ஜி – நிஜாமுத்தீன்

தொடர் – 1
அறிமுகம்.

உலக அளவில் 200 கோடி மக்களால் – அவர்களுக்கு போதிக்கப்பட்டுள்ள படி இரச்சகராகவும், 170 கோடி முஸ்லிம்களால் அவர்களின் வேத அறிவிப்புப் படி இறைத்தூதராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சிறந்த மனிதர் இயேசு என்று அழைக்கப்படக் கூடிய ஈஸா(அலை) அவர்கள்.

இவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சர்ச்சை இரு சமூக, சமூக தலைவர்களுக்கு மத குருக்களுக்கு மத்தியில் நீண்ட நெடுங்காலமாக நடந்து வந்துக்கொண்டிருக்கிறது.

என் மறுப்பு:

மிக மிக உண்மை. இயேசுவின் பிறப்புபற்றி கி.பி. முதலாம் நுற்றாண்டில் அவருடைய சீடர்கள், அவரோடு வாழ்ந்தவர்கள், ஏன் அவருடைய தாயாரே ஏற்றுக்கொண்டதை, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வந்த குர்-ஆன் வேறு விதமாகச் சொன்னதால், இந்த சர்ச்சை இன்னும் உள்ளது.

இயேசுவின் தாய், இயேசுவின் சீடர்களோடு சேர்ந்து ஊழியம் செய்தார்கள். இயேசுவின் சீடர்கள் மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதையும், இயேசுவின் பிறப்பு, மற்றும் மற்ற விவரங்களை இதர மக்களுக்கு சொல்லும்போதும், மரியாள் கூட இருந்தார்கள். குர்-ஆன் சொல்வது போல இருந்துஇருந்தால், மரியாள் தடுத்துயிருப்பார்கள். இயேசுவின் சீடர்கள் மரியாளோடு இயேசுவின் வாழ்வு பற்றி கேள்விகள் கேட்டுயிருப்பார்கள். மரியாள் தான் வளர்த்த பிள்ளையைப்பற்றிய விவரங்களை தெளிவாகவும், சந்தோஷமாகவும் சொல்லியிருந்திருப்பார்கள். இவைகளைப் பற்றித்தான் புதிய ஏற்பாட்டின் சுவிசஷங்கள் சொல்கின்றன.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இதில் இயேசுவை இரச்சகர் – கடவுளின் மகன் என்று கூறி வழிப்படுவோர் வெறும் கற்பனையால் புனையப்பட்ட யூகத்தின் அடிப்படையில்தான் தம்முடைய நம்பிக்கையை வளர்த்து வைத்துள்ளார்கள் என்று அந்த சமூகம் சார்ந்த சில வரலாற்று ஆய்வாளர்கள் துணிந்து தெரிவித்து வருகிறார்கள். பரிசுத் வேதாகாமம் என்று கிறிஸ்துவர்களால் போற்றப்படும் பைபிளில் இயேசுவைப் பற்றி முன்னுக்குப் பின் முரணாக வந்துள்ள கருத்துக்களையும் சம்பவங்களையும் அந்த வரலாற்றாளர்கள் தங்களுடைய கருத்துக்கு சாதகமாக ஆதாரமாக எடுத்து வைக்கிறார்கள். உரிய இடத்தில் இறை நாட்டப்படி அதை நாம் விளக்குவோம்.

என் மறுப்பு:

குர்-ஆன் கற்பனையா? அல்லது பைபிள் கற்பனையா என்பது இரண்டையும் ஆராயும் அன்பர்களுக்கு விளங்கும். குர்-ஆனில் உள்ள முரண்பாடுகளுக்கு குர்-ஆனும், ஹதீஸ்களும் இஸ்லாமிய சரித்திர நூல்களுமே சாட்சி. சரித்திர நூல்களும், தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளும் பைபிளில் சொல்லப்பட்டவைகளே உண்மையானவை என்று நிருபிக்கின்றன.

ஆரோனின் சகோதரியான மிரியாம் பற்றி சிறிது தெரிந்துக்கொண்டு, இயேசுவின் தாயை “ஆரோனின் சகோதரியே” என்று கூறுவதிலும், பெர்சிய அரசன் அகாஸ்வோறு அரசனின் மந்திரியாக இருந்த “ஆமான்” என்ற நபரை, எகிப்தின் பார்வோனோடு சம்மந்தப்படுத்தி பேசும் போதும் குர்-ஆன் முரண்படுகின்றது.

சொத்துக்களை பிரித்துகொடுப்பதில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். ஹதிஸ்கள், மற்றும் ஷரியாவின் உதவியில்லாமல் குர்-ஆனில் சொல்லியபடி, சொத்துக்களை பிரித்து கொடுக்கமுடியுமா? மிகத் தெளிவாக உள்ள குர்-ஆனின் தவறை திருத்துவதற்கு சீராக்களும், சரித்திர நூல்களும், ஹதீஸ்களும் தேவைப்படுகின்றன. குர்-ஆன் படி சொத்துக்களை பிரித்துகொடுத்தால், 100 சதவிகிதத்திற்கு அதிகமாக போகிறது. யார் மீதி சொத்துக்களை தருவது. இதைப்பற்றியும் நாம் ஒரு கட்டுரையைக் காண்போம்.

குர்-ஆன் 4:11, 4:12, மற்றும் 4:176 வசனங்கள் சொத்துக்கள் பிரிப்பதைப்பற்றி அல்லாவின் கட்டளையை கொண்டுள்ளது.
இந்த முரண்பாட்டைப்பற்றி இங்கு படிக்கலாம். Inheritance in Koran Koran Contradictions

இயேசுவின் பிறப்பு பற்றியும், அவரின் மரணம், மற்றும் உயிர்த்தெழுதலைப்பற்றியும் எந்த ஒரு முரண்பாடும் இல்லை. இந்நிகழ்ச்சிகளில் உள்ள ஒற்றுமையை இங்கு காணலாம். ( ai url )

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இயேசுவை இறைத்தூதராக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களிடம் அவரை இறைத்தூதர் என்று அறிவிக்கும் குர்ஆன் உள்ளது. இதில் இயேசுவின் பிறப்பு அதிசயம், குழந்தை பருவம், மழலை பருவத்தில் அவர் தம் தாயின் கற்புக்கு கொடுத்த உத்திர வாதம், வாலிபம், பிரச்சாரம், அவரது சீடர்கள், எதிரிகளின் சூழ்ச்சி, இறுதி முடிவு என்று அவர் பற்றிய எல்லா விபரங்களும் கூறப்பட்டுள்ளன. அவரை கடவுளின் குமாரர் என்று – இரச்சகர் என்றோ குர்ஆன் ஏற்கவில்லை. அவ்வாறு கூறுவோரின் கூற்றை குர்ஆன் கடுமையாக மறுத்துள்ளது.

என் மறுப்பு:

குர்-ஆன் வருவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே இயேசு தெளிவாக சொல்லிவிட்டார், தனக்கு பின் அனேக “கள்ள தீர்க்கதரிசிகள்” வருவார்கள், அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று.

குர்-ஆனுக்கு இறைத்தூதருக்கும்(தீர்க்கதரிசிக்கும்), நல்ல இறைவனிடியார்களுக்கும் ( நீதிமானுக்கும்) உள்ள வித்தியாசமே தெரியவில்லை. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு போன்றோர்கள் எந்த இனமக்களுக்காகவும் நபிகளாக அனுப்பப்படவில்லை. அவர்கள் தங்களுக்கு தேவன் காண்பித்த தேசத்தில் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்கள். இவர்கள் நீதிமான்கள் அவ்வளவு தான். தங்கள் குடும்பங்களுக்கு இவர்கள் எதிர்காலத்தைப்பற்றியும், நீதிமானாக வாழ்வதைப்பற்றியும் எச்சரித்தார்களே தவிர, ஊருக்கெல்லாம் தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்கள் பாவங்களிலிருந்து மனம்திரும்பும்படி யாருக்கும் எச்சரிக்கவில்லை. ஆனால் இவர்கள் தங்கள் இனமக்களுக்கு எச்சரிக்க அல்லாவால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் என்றுச் சொல்கிறது. எலியா, எலிஷா, எசாயா, யோவான் போன்று மக்களை நல்வழிப்படுத்த அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் அல்ல.

இப்படிப்பட்ட குர்-ஆன், இயேசு ஒரு நபி மட்டும் தான் என்றுச் சொல்வதில், கிறிஸ்தவர்களுக்கு எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

சமூகமும் – இயேசுவின் பிறப்பும்

இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி முழுமையான தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அவர் எந்த சமுதாயத்திற்கு வந்து தம் பணியை சிறப்பாக செய்தாரோ அந்த சமுதாயம் பற்றி ஓரளவு தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இயேசுவின் வருகைக்கு ஏறத்தாழ 2000 – 2500 வருடங்களுக்கு முன் அப்ரஹாம் (இப்ராஹீம்) என்ற தீர்க்கதரிசி (இன்றைய இராக்கில்) தோன்றினார். அவருக்கு சாராள் (சபுரா) ஆகார் (ஹாஜரா) என்று இரு மனைவிகள்.

என் மறுப்பு:

சாராளுடைய அடிமைப்பெண்தான் ஆகார். ஆகார் என்றுமே ஆபிரகாமின் மனைவியாக தேவன் கருதவில்லை. ஆகாரை சாராளின் அடிமைப்பெண் என்று தான் பைபிள் குறிப்பிடுகிறது.

a) அடிமைப்பெண் மறுமனையாட்டியாகிறாள்: ஆதியாகமம்: 16:1-3

ஆதியாகமம் 16:1-3

16:1. ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர் கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளுக்கு இருந்தாள்.

16:2. சாராய் ஆபிராமை நோக்கி, நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.

16:3. ஆபிராம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான த்ன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.

b) சாராள் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறாள்: ஆதியாகமம்: 16:4-5

ஆதியாகமம் 16:4-5

16:4. அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்

16:5. அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி, எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப் பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள்.

c) ஆபிரகாம் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறார் ஆதியாகமம்: 16:6

ஆதியாகமம் 16:6

16:6. அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி, இதோ உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்

d) கர்த்தருடைய தூதனானவர் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறார்: ஆதியாகமம்: 16:7-8

ஆகாரும் தன்னை “ஆபிரகாமின் மனைவி என்றுச் சொல்லிக்கொள்ளவில்லை” தன்னை சாராளின் ( நாச்சியார் ) அடிமைப்பெண் என்றே சொல்கிறாள்.

கர்த்தருடைய தூதனானவர் கூட “ஆபிரகாமின் மனைவியே அல்லது ஆகாரே என்றுச் சொல்லாமல்” சாராளின் அடிமைப்பெண்ணே என்றுத் தான் அழைக்கிறார்.

ஆதியாகமம் 16:7-8

16:7. கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு,

16:8. சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள், நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.

e) இஸ்மவேல் ஒரு தீர்க்கதரிசி அல்ல: ஆதியாகமம்: 16:9-12

முகமதுவுடைய நம்பிக்கை என்னவென்றால், ஆபிரகாமிற்கு பிறப்பவர்கள் எல்லாம் தீர்க்கதரிசிகள் என்று நம்பினார். ஆனால், இஸ்மவேல் ஒரு சாதாரண் மனிதனே தவிர ஒரு தீர்க்கதரிசி அல்ல. மற்றுமில்லை, அவன் ஒரு “துஷ்டமனுஷனாக இருப்பான்” என்று கர்த்தர் என்று சொல்லியிருக்கிறார்.

ஆதியாகமம் 16:9-12

16:9. அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர், நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.

16:10. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி, உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்க்கும் என்றார்.

16:11. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி, நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.

16:12. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.

f) ஆபிரகாமின் மற்றொரு மனைவி: ஆதியாகமம்: 25:1-2

ஆபிரகாமிற்கு இரண்டு மனைவிகள் மட்டுமல்ல, அவருக்கு இன்னொரு மனைவியும் இருந்தாள். இவர்களுடைய பிள்ளைகளைப்பற்றி குர்-ஆன் ஒன்றுமே சொல்லவில்லையே. இவளுடைய பிள்ளைகள் தீர்க்கதரிசிகள் ( இறைத்தூதர்கள் ) இல்லையோ?

ஆதியாகமம் 25:1-2

25:1. ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.
25:2. அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள் .

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இதில் ஆகார் என்ற இரண்டாவது மனைவியான ஹாஜராவிற்கு இஸ்மவேல் என்ற இஸ்மாயீல் முதல் மகனாக பிறக்கிறார்கள். இஸ்மவேலையும் (இஸ்மாயீல்) அவர் தாயார் ஆகார் (ஹாஜராவையும்) ரையும் இறைப்பணிக்காக அரபு தேசத்தில் (சவூதி அரோபியாவில்) இருக்கும் மக்கா என்ற ஊரில் ஆப்ரஹாம் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். இந்த விபரம் குர்ஆனிலும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை போதிக்கும் புகாரி என்ற பெரு நூலிலும், பைபிளின் பழைய ஏற்பாட்டின் ஆதியாகாமத்தின் அதிகாரங்கள் 12, 13. 14, 15, 16. 17 ஆகியவைகளிலும் விரிவாக கூறப்பட்டுள்ளது.

என் மறுப்பு:

அருமை அருமை. அவ்வளவு தெளிவாகச் சொல்கிறீர்கள். குர்-ஆனில், ஹதீஸ்களில் உள்ளது என்றுச் சொன்னால், பரவாயில்லை போனால் போகட்டும் என்று விட்டுவிடலாம். பழைய ஏற்பாட்டில் கூட உள்ளதாமே! மக்காவில் ஆபிரகாம் இஸ்மவேலை விட்டு வந்த செய்தி. இதை படிக்கும் இஸ்லாமியர்கள் பழைய ஏற்பாட்டில் தேடிபார்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தானே உங்களுக்கு.

இறைபணிக்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்காவில் ஆபிரகாம் விட்டு வந்தார் என்று பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளதா? அல்லது வீட்டைவிட்டு துரத்திவிட்டார் அல்லது அனுப்பிவிட்டார் என்று உள்ளதா?

அவ்வளவு ஏன், நீரே பழைய ஏற்பாட்டை தொடவில்லை என்று நன்றாக புரிகிறது. ஆபிரகாம், ஆகாரையும், இஸ்மவேலையும், தன் வீட்டைவிட்டு அனுப்புவிடும் செய்தியை மாற்றி மக்காவில் கொண்டுவிட்டதாக சொல்கிறீர். இது மட்டுமா, ஆதியாகமம் 21ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட காரியத்தை, நீர் ஆதியாகமம் 17வது அதிகாரம் வரையில் சொல்லியிருக்கிறது என்றுச் சொல்கிறீர்.

ஆதியாகமம்: 21:12-21

21:12. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி, அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.
21:13. அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.
21:14. ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.
21:15. துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு,
21:16. பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.
21:17. தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.
21:18. நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.
21:19. தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
21:20. தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான்.
21:21. அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்

ஆபிரகாம் மக்காவிற்கு இஸ்மவேலோடு வந்தார், அங்கு காபாவை புதுப்பித்தார் என்ற குர்-ஆனின், ஹதீஸ்களின் வாதத்திற்கு இதுவரையில் எந்த சரித்திர ஆதாரமும், அகழ்வாராச்சி ஆதாரமும் இல்லை.

1. ஊர் என்ற தேசத்திலிருந்து, பாலும், தேனும் ஓடும் தேசத்திற்கு போகும்படி சொன்ன அல்லா, ஏன் பிறகு இங்கிருந்து மக்காவிற்கு போகச்சொல்கிறார்?

2. 100 வயதுள்ள ஆபிரகாம், ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டு, ஆகாரோடு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள மக்காவிற்கு பாலைவனத்தில் எப்படி சென்றார் என்பது தான் ஆச்சரியம். ஒரு பாம்பு வழிகாட்டியதோ?

3. மக்காவில் தீர்க்கதரிசனம் உரைத்து, மக்கா மக்களை நேர்வழியில் நடத்துவதற்காகவா?

4. இவர்கள் காபாவை புதுப்பிக்கும்போது மக்காவில் யாரும் வாழவில்லை. ஒரு மனிதனும் இல்லை. ஊரிலே யாரும் இல்லாத போது, அங்கு காபாவை பாதுகாக்க அல்லது ஒரு பொருப்பாளியாக இஸ்மாயில் எதற்கு? கி.மு. 2000 லிருந்து கி.பி வரை மக்காவில் மனித நடமாட்டம் இல்லை என்று சரித்திரம் சொல்கிறது.

Tabari VI:52 “The Ka’aba had not had any custodians since its destruction in the time of
Noah. Then Allah commanded Abraham to settle his son by the Ka’aba, wishing thereby to
show a mark of esteem to one whom he later ennobled by means of his Prophet Muhammad.”
“Abraham and his son Ishmael were custodians of the Ka’aba after the time of Noah. At the time, Mecca was uninhabited….”

இஷாக், மற்றும் டபரி போன்றவர்களின் தொகுப்பில் இதைப்பற்றிச் சொல்லியுள்ளது. ஆனால் நீர் சொன்னது போல எந்த ஹதீஸிலும் இல்லை. புகாரி ஹதீஸிலும் இந்நிகழ்ச்சி பற்றிய செய்தி இல்லை. (ஷகீனா வழிகாட்டியதாக வரும் செய்தி)

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

(முக்கிய குறிப்பு) கிறிஸ்துவ மத குருமார்கள்; இயேசுவிற்குபிறகு எந்த நபியும் இல்லை என வாதிக்கிறார்கள். இதற்கு காரணம் ஆப்ரஹாமின் முதல் மகன் இஸ்மவேலின் வரலாற்றை அவர்கள் கண்டுக் கொள்ளாததேயாகும். இரண்டாவது மகனான ஈசாக்குவின் பக்கமே அவர்களின் கவனம் செலுத்தப்படுகிறது. அதனால் இஸ்மவேலைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை உரிய இடத்தில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்)

என் மறுப்பு:

அருமை நண்பரே, ஆபிரகாமின் முதல் மனைவி மூலம் பிறந்த ஈசாக் மட்டுமல்ல, ஆகார் மூலமாக பிறந்த இஸ்மவேல் கூட ஒரு நபி என்று சொல்கிறீர். இவரை கிறிஸ்தவ குருக்கள் சிந்திக்கவில்லை என்றுச் சொல்கிறீர். ஆபிரகாமின் வேறு ஒரு மனைவியைப் பற்றி உமக்குத் தெரியுமா? அவர்கள் பிள்ளைகள் பற்றி அல்லா என்ன சொல்லியுள்ளார்? அவர்கள் பக்கம் உங்கள் கவனம் ஏன் போகவில்லை ?

a) ஆபிரகாமின் மற்றொரு மனைவி:

ஆபிரகாமிற்கு இரண்டு மனைவிகள் மட்டுமல்ல, அவருக்கு இன்னொரு மனைவியும் இருந்தாள். இவர்களுடைய பிள்ளைகளைப்பற்றி குர்-ஆன் ஒன்றுமே சொல்லவில்லையே. இவளுடைய பிள்ளைகள் தீர்க்கதரிசிகள் ( இறைத்தூதர்கள் ) இல்லையோ?

ஆதியாகமம்: 25:1-2

25:1. ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.
25:2. அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.

b) நபிக்கள் வருவது ( நபித்துவம் ), வேதம் கொடுக்கப்படுவது ஈசாக்கு வம்சத்திற்கு – குர்-ஆன் சாட்சி :

குர்-ஆனில் சொல்லப்பட்ட நபித்துவத்தைப்பற்றி 4 வசனமும் இஸ்ரவேல் மக்களைப்பற்றியே பேசுகிறது. நபித்துவமும், வேதமும் ஈசாக் வம்சத்திற்கு மட்டுமே உரியது என்று குர்-ஆன் சொல்கிறது, இஸ்மவேல் வம்சத்திற்கு அல்ல. 2500 ஆண்டுகளாக ( ஆபிரகாமிலிருந்து ( 2000 கி.மு), முகமது (570 கி.பி.) வரை) எல்லா நபிகளும் ஈசாக்கு வம்சத்திலிருந்து தான் வந்துள்ளார்கள். ஒரு நபிகூட இஸ்மவேல் வம்சம் இல்லை. இஸ்மவேல் நபி என்றால், அவரின் பிள்ளைகள் அல்லது மற்ற வம்சத்தார்கள் யார் நபியாக இருந்தார்கள்? யாருடைய பெயரையாவது சொல்லமுடியுமா?

c) இதோ ஈசாக்கு வம்சத்திற்குத் தான் நபித்துவம், வேதம் என்று குர்-ஆன் சொல்லும் சாட்சி: 6:89, 11:28, 29:27, 57:26

குர்-ஆன் 6:89, 11:28, 29:27, 57:26

6:89 இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம்; ஆகவே இவற்றை இவர்கள் நிராகரித்தால் இதனை நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம் நிச்சயமாக பொறுப்பாக்குவோம்.

11:28 (அதற்கு) அவர் (மக்களை நோக்கி) ‘என் சமூகத்தவர்களே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடமிருந்து (பெற்ற) தெளிவின் மீது இருந்து அவனிடமிருந்து (நபித்துவம் என்னும்) ஓர் அருளையும் அவன் எனக்கு தந்திருந்து அது உங்களுக்கு (அறியமுடியாமல்) மறைக்கப்பட்டு விடுமானால் நீங்கள் அதனை வெறுத்துக் கொண்டிருக்கும் போது அதனை(ப் பின்பற்றுமாறு) நான் உங்களை நிர்பந்திக்க முடியுமா?” என்று கூறினார்.

29:27 மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார்.

57:26 அன்றியும், திடமாக நாமே நுூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம்; இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக – பாவிகளாக இருந்தனர்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

ஆப்ரஹாம் (இப்ராஹீம்) அவர்களின் முதல் மனைவியான சாராள் என்ற சபுராவிற்கு ஈசாக்கு என்ற இஸ்ஹாக் அவர்கள் இரண்டாவது குழந்தையாக பிறக்கிறார்கள். இவர்களின் சந்ததி பல கிளைகளாக பிரிந்து பெருகி பல இடங்களில் வாழ்ந்தார்கள். இவர்களில் ஒவ்வொரு சந்ததியினருக்கும் நேர்வழிக் காட்ட இறைவன் புறத்திலிருந்து தீர்கதரிசிகள் – இறைத்தூதர்கள் வந்துள்ளார்கள்.

ஈசாக்(இஸ்ஹாக்)குடைய மகனாக யாகோப்(யஃகூப்) என்ற தீர்கதரிசி பிறக்கிறார்கள். இவர்களே ‘இஸ்ராயீல்’ என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்களின் சந்ததியில் வந்தவர்கள்கள் தான் யூதர்கள் என்று அழைக்கப்படக்கூடிய இஸ்ரவேலர்கள்.

அப்ரஹாம்(இப்ராஹீம்) அவர்கள் தம் மக்களுக்கு செய்த உபதேசத்தையே அவர்களின் மகன் ஈசாக்(இஸ்ஹாக்) அவர்களும், அவர்களுக்கு பின் மகன் வழி பேரன் யாகோப்(யஃகூப்) அவர்களும் செய்கிறார்கள். இந்த விபரங்கள் அனைத்தும் குர்ஆனில் வருகிறது.

‘(ஆப்ரஹாம் ஆகிய) அவருக்கு அவருடைய இறைவன் ”எனக்கு நீர் கீழ்படியும்” என்று கூறியதும் ”அகிலத்தாரின் இரச்சகனுக்கு நான் கீழ்படிந்து விட்டேன்” என்று கூறினார் (அல் குர்ஆன் 2:131)

இதையே தம் மக்களுக்கு அவர்கள் நல்லுரையாகவும் கூறினார்கள்.

(இஸ்ரவேலாகிய) யஃகூபும் ” என் மக்களே! நிச்சயமாக இறைவன் இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே உங்களுக்கு தேர்ந்தெடுத்துள்ளான். எனவே நீங்கள் (அந்த ஏக இறைவனுக்கு) முற்றிலும் கீழ் படிந்தவர்களாக அன்றி மரணித்து விட வேண்டாம்” என்கிறார்கள். (அல் குர்ஆன் 2:132)

யாகோபிற்கு மரணம் நெருங்கியதும் அவர் தம் மக்களிடம் கேட்கிறார் ”எனக்கு பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?”

மக்கள் பதில் சொல்கிறார்கள் ”நீங்கள் வணங்கிய அந்த வணக்கத்திற்குறியவனும் உங்கள் (குடும்ப) முன்னோர்களான அப்ரஹாம்(இப்ராஹீம்) இஸ்மவேல்(இஸ்மாயீல்) ஈசாக்(இஸ்ஹாக்) ஆகியோர் வணக்கத்திற்குறியவனாக ஏற்று வணங்கிய அந்த ஒரே அறைவனையே வணங்குவோம்” (அல் குர்ஆன் 2:133)

என் மறுப்பு:

ஆபிரகாம், ஈசாக் பட்டியலில் இஸ்மவேலும் சேர்ந்துவிட்டார். பைபிளில் ஒரு இடத்திலும் ஆபிரகாம், ஈசாக் பட்டியலில் இஸ்மவேலின் பெயரை சேர்த்து ” நான் ஆபிரகாமின், இஸ்மவேலின், ஈசாக்கின் தேவன்” என்றுச் சொன்னதில்லை.
இப்படிச் சொன்னால், கிறிஸ்தவர்கள் மாற்றி எழுதிவிட்டார்கள் என்றுச் சொல்வீர்கள்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இப்படி பல இறைத்தூதர்களிடமிருந்து அறிவுரைகளைப் பெற்ற யூதர்கள் பின்னாளில் கடின சித்தம் உள்ளவர்களாகவும் எத்தகைய கொடுமையை செய்வதற்கும் அஞ்சாதவர்களாகவும் மாறிப்போனர்கள். இத்தயை மக்களிடம் தான் இயேசு(ஈஸா) அவர்கள் பிரசாரம் செய்வதற்காக வருகிறார்கள் கடைசியாக.

என் மறுப்பு:

பிரச்சாரம் செய்வதற்காக மட்டுமல்ல, உலகத்தின் எல்லா மக்களுக்காகவும் மரிப்பதற்காகவும், பிறகு உயிரோடு எழுந்திருப்பதற்காகவும் வந்தார்.

குர்-ஆன் 19:33

“இன்னும் நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது. — இயேசு.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இயேசுவிற்கு முன்னால் மோஸே (மூஸா) அவர்கள் அதே மக்களை வந்து சந்திக்கிறார்கள்.

”நாம் மூஸாவிற்கு திட்டமாக வேதத்தை கொடுத்தோம். அவருக்கு பின்னால் தொடர்ச்சியாக இறைத்தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்தோம். மரியாளின் (மர்யமின்) குமாரர் இயேசு(ஈஸா)விற்கு nதிளிவான அத்தாட்சிகளை வழங்கியும் பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு அவரை பலப்படுத்தியும் வைத்தோம். (யூதர்களே) உங்கள் மனம் விரும்பாததை (நம்முடைய) எந்த தூதர் உங்களிடம் கொண்டு வந்தாலும் நீங்கள் பெருமையடிக்கிறீர்கள். ஒரு சாராரை பொய்படுத்தினீர்கள் ஒரு சாராரை கொலையும் செய்தீர்கள்.” (அல் குர்ஆன் 2:87)

மோஸே அவர்களுக்க பிறகு இறைவன் தொடர்சியாக யூதர்களுக்காக தீர்கதரிசிகளை அனுப்பிக் கொண்டிருந்தான். அப்படி அனுப்பப்பட்ட தீர்கதரிசிகள் யூதர்களால் ”பொய்பிக்கப்பட்டார்கள்” அல்லது ”கொலை செய்யப்பட்டார்கள்” என்ற விபரம் மேற்கண்ட வசனத்தில் கிடைக்கின்றன. பொய்பிப்பதற்கும் கொலை செய்யப்பட்டதற்கும் என்ன காரணம்? அதே வசனத்தில் விடையும் கிடைத்து விடுகிறது. ‘உங்கள் மனம் விரும்பாததை எந்த தூதர் உங்களிடம் கொண்டு வந்தாலும்..’ என்ற இறைவனின் வார்த்தைகள், யூதர்கள் அவர்களின் மன விருப்பத்திற்கு மாற்றமாக – அவர்களை நல்வழிப்படுத்தக் கூடிய எந்த செய்தியையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை.

என் மறுப்பு:

நல்லது, தொடருங்கள்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

ஒரு கொள்கை நமக்கு பிடிக்காவிட்டால் அதை விட்டு நாம் ஒதுங்கிப் போகலாம் அல்லது அதை விமர்சிக்கலாம் இதை நாம் உலகில் இன்றும் பார்க்கிறோம். ஆனால் தாம் விரும்பாத ஒரு கொள்கையை – செய்தியை சொல்பவர்களை கொலை செய்யும் மனப்பக்குவம் பெற்றவர்களை கண்டிருக்கிறோமா… யூதர்கள் அந்த காரியத்தில் ஈடுபட்டார்கள். இதையும் அந்த வசனத்திலிருந்தே அறியலாம்.

என் மறுப்பு:

ஆமாம், யூதர்கள் அப்படிச்செய்தார்கள், உண்மை தான். இன்னொரு பிரிவினரும் இப்படிச் செய்தார்கள். அவர் தான், முகமதுவும் அவரது தோழர்களும்.

தன்னை விமர்சித்து கவிதை எழுதிய ஐந்து பிள்ளைகளின் தாய்க்கு முகமது என்ன செய்தார்? இங்கு படிக்கவும்.
The Death of `Asma’ Bint Marwan
“ஒரு கொள்கை நமக்கு பிடிக்காவிட்டால் அதை விட்டு நாம் ஒதுங்கிப் போகலாம் அல்லது அதை விமர்சிக்கலாம் இதை நாம் உலகில் இன்றும் பார்க்கிறோம். ” — இதனை நான் ஆமோதிக்கிறேன்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இந்த சூழலில் தான் அந்த சமூகத்திற்கு வழிகாட்ட இயேசு(ஈஸா) தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

எவ்வளவுதான் கெட்ட சமுதாயமாக இருந்தாலும் அதிலும் அபூர்வமாக இறைவனுக்கு அஞ்சி தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடிய சில நல்ல மனிதர்கள் இருந்து விடுவது இயல்புதான். அந்த நல்லவர்கள் மூலமாகவும், தாம் நல்லவர்களாக உருவாக்கும் தம்முடைய சந்ததிகள் மூலமாகவும் – வரும் தலைமுறைக்கு – நல்ல விஷயங்கள் போய் சேர இது வழிவகுக்கிறது இறைவன் தான் இந்த ஏற்பாட்டை செய்கிறான்.

இறைவனின் இந்த ஏற்பாட்டின் அடிப்படையில்தான் யூத வம்சத்தில் பிறந்த இயேசு(ஈஸா) அவர்களின் பாட்டி – அதாவது மரியாள்(மர்யம்) உடைய தாயார் – நல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். இறைவனுக்கு அஞ்சி அவனுக்கு மட்டும் வழிபட்டு நடந்த அந்த அம்மையாரின் பிரார்த்தனைக்காகவும்,

‘இயல்பாக’ சராசரியாக வந்த தூதர்கள் அனைவரும் பொய்பிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதால் ‘பிறப்பிலேயே அற்புதம் மிக்க ஒரு இறைத்தூதரை யூதர்களுக்காக அனுப்புவோம்’ என்ற இறைவனின் ஏற்பாட்டின் படியுமே இயேசு(ஈஸா) அவர்களின் பிறப்பு நிகழ்கிறது.

என் மறுப்பு:

பிறப்பிலே அற்புதம் மட்டுமில்லை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அவருடைய பிறப்பு, மரணம், உயிர்தெழல் போன்ற எல்லாம் தூள்ளியமாக பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.

setstats1

138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி (ஆசிரியர்: பிஷப் தீமோத்தேயுஸ் நசீர் , பாகிஸ்தான் )

December 30, 2007


(The Great Deception: Author Bishop T Nasir)

தமிழாக்க முன்னுரை: நான் பாகிஸ்தான் கிறிஸ்தவ போஸ்ட்( Pakistan Christian Post ) என்ற தளத்தில் பல மாதங்களாக கட்டுரைகளை படித்துவருகிறேன். இந்த கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து நம் தளங்களில் பதிக்க அனுமதி கொடுக்கிறீர்களா? என்று, பாகிஸ்தான் கிறிஸ்தவ போஸ்ட் பத்திரிக்கையின் ஆசிரியருக்கு கடிதம் எழுதிய போது, இந்த ஒரு கட்டுரைக்கு மட்டுமல்ல, மற்ற எல்லா கட்டுரைகளையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட எனக்கு அனுமதி அளித்தார். அதற்காக முதலாவது நான் தேவனுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பத்திரிக்கையின் ஆசிரியர், Dr. Nazir S Bhatti அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழாக்கம் தொடர்கிறது…

அக்டோபர் 2007ல் உலகம் அனைத்திலும் உள்ள இஸ்லாமிய அறிஞர்களில் 138 பேர் ஒரு குழுவாக சேர்ந்து பாகிஸ்தான் உட்பட, “உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பொதுப்படை வார்த்தை (A Common Word between You and Us) ” என்ற கடிதத்தை வெளியிட்டார்கள்.

இந்த கடிதம், கிறிஸ்தவ உலகத்தில் ஒரு சராசரி கிறிஸ்தவன் முதல், போப் பெனடிக்ட் XVI (Pope Banedict XVI) வரை உள்ள எல்லாருக்காகவும் எழுதப்பட்டது. இக்கடிதத்தில் அழுத்திச் செல்லப்பட்ட கருப்பொருள் என்னவென்றால், இயேசு கிறிஸ்து போதித்த ” ஒருவரை ஒருவர் நேசித்தல் – Neighborly Love ” என்பதே. இவர்கள் (இந்த இஸ்லாமிய அறிஞர்கள்) “ஒருவரை ஒருவர் நேசித்தல்” என்பது கிறிஸ்தவத்திலும், இஸ்லாமிலும் இருக்கும் ஒரு பொதுவான “கோட்பாடு” தான் என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

இந்த கடிதத்தை இங்கு படிக்கலாம் : A Commom Word

நான் ஒரு கிறிஸ்தவ தீவிரவாதி(Radical Christian) கிடையாது, இருந்தாலும் என் அனுபவத்தையும், எனக்கு தெரிந்த விவரங்களையும் முன்வைத்து, கீழ் கண்ட கேள்வியை கேட்க விரும்புகிறேன்:

இஸ்லாமிய கோட்பாடுகளில், “ஒருவரை ஒருவர் நேசித்தல்” என்ற வார்த்தைகள் “இஸ்லாமியர்-அல்லாத” மக்களைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா?

(The word “Neighborly Love” for a Non-Muslim, does exist in Islamic ideology?)

இக்கடிதம், உலமனைத்திலும் உள்ள எல்லா முஸ்லீம்களுக்கு, அவர்கள் புரிந்துக்கொள்ளும் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்த்து அனுப்பப்பட்டுள்ளது. இக்கடிதத்தை அனுப்புவதினால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அதாவது முஸ்லீம் அறிஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும், வெள்ளைக்காரருக்கும், கருப்பருக்கும், வேறு யாருக்கும் இக்கடிதம் மூலமாக எந்த நன்மையும் விளையப்போவதில்லை. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ” இஸ்லாம்‍-அல்லாதவர்களை” வெறுக்கவேண்டும் மற்றும் கொல்லவேண்டும், அவ்வளவு தான். இந்த 138 இஸ்லாமிய அறிஞர்கள் உலகம் அனைத்திலும் உள்ள கிறிஸ்தவ தலைவர்களுக்கு அனுப்பிய இந்த கடித அழைப்பைப் பற்றி மிகவும் அக்கறை உள்ளவர்களாக இருந்தால், முதலாவது அவர்கள் தங்கள் சொந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் அவர்கள் இப்போது கடிதத்தில் எழுதின “அன்பு (Love‍)” என்பதைப் பற்றி கற்றுக்கொடுக்கட்டும். பாகிஸ்தான், தன் நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களையும், மற்றும் உள்ள இஸ்லாம் அல்லாதவர்களையும் நேர்மையாகவே நடத்துகிறது. இப்படி இருந்தும், பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும், மற்ற இஸ்லாம் அல்லாத சிறும்பான்மை இனத்திற்கு எதிராகவும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு கொடுமை நடந்தவண்ணமாகவே உள்ளது. கிறிஸ்தவர்களாகிய நாங்கள், “அயலகத்தாரிடத்தில் அன்பு கூறுதல்” என்ற வார்த்தைகளின் பொருளை, முஸ்லீம்களை விட அதிகமாகவும், தெளிவாகவும் புரிந்துவைத்துள்ளோம்.

இந்த இஸ்லாமிய அறிஞர்கள் முதலாவது உலகமனைத்திலுமுள்ள இஸ்லாமியர்களிடத்தில் செல்லட்டும், இஸ்லாமியர்களின் அடிபாக மக்கள் வரை செல்லட்டும், அதாவது எல்லா மதரசாக்களுக்கும், எல்லா மசூதிகளுக்கும் செல்லட்டும் . அவர்கள் “ஒருவரில் ஒருவர் அன்பு கூறுவது” என்றால் என்ன என்று மசூதிகளில் கற்றுக்கொடுக்கட்டும். தங்கள் மதரசாக்களிலிருந்து “அன்பு கூறுதல்” என்றால் என்ன என்று சாதாரண சராசரி முஸ்லீம்களுக்கு கற்றுக்கொடுக்கட்டும். இஸ்லாமியர்கள் “ஒருவரில் ஒருவர் அன்பு கூறுவது” என்றால் என்ன என்று தெரிந்துக்கொண்ட பிறகு வேண்டுமானால், இஸ்லாமிய அறிஞர்கள் கிறிஸ்தவர்களுக்கும், மற்ற மதங்களைச் சார்ந்தவர்களாகிய யூதர்களுக்கும், இந்துக்களுக்கும், காதியானியர்களுக்கும், இன்னும் உள்ள பெரிய சிறிய முஸ்லீம் அல்லாத மக்களுக்கும் அழைப்பு விடுக்கட்டும். அப்போது இரு பிரிவினருக்கும் இடையே ” ஒரு பொதுவான வார்த்தைகளைப் A Common Word ” பற்றி நாம் உட்கார்ந்து பேசுவோம்.

இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய “உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பொதுப்படை வார்த்தை (A Common Word between You and Us)” என்ற ஏமாற்று கடிதத்தை படித்த பிறகு நான் கீழ் கண்ட முடிவுக்கு வந்தேன். அதாவது, சர்க்கரையில் தோய்த்து எடுக்கப்பட்ட இனிய‌வார்த்தைகளை பயன்படுத்தி “கிறிஸ்தவ உலகை” ஏமாற்ற எடுக்கப்பட்ட ஒரு முயற்சி தான் இது. இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்க போகும் முன்பு அனுப்பப்பட்ட “மூன்று அம்ச செய்தி (Three Point Message) ” போல, முஸ்லீம்கள் இப்போது கிறிஸ்தவர்களுக்கு செய்தி அனுப்புவதற்கு இது ஏற்ற‌ நேரம் இல்லை.

அந்த மூன்று அம்ச செய்தி கீழே கொடுக்கப்பட்டது போல் அல்லவா இருந்தது:

1. இஸ்லாமை ஏற்றுக்கொள் (அ) இஸ்லாமுக்கு மாறு

2. அப்படி மாறவில்லையானால், முஸ்லீம்களுக்கு ” அடங்கி இருந்து“, பாதுகாப்பு வரி என்னும் ஜிஸ்யா வரி கட்டு.

3. இவை இரண்டையும் ஏற்றுக் கொள்ளவில்லையானால், அப்போது “எங்கள் வாள்கள் முடிவெடுக்கட்டும் “.


( 1. Accept Islam or convert to Islam .

2. If not, then become “Humble Subject” of Muslims and pay “Jazia” (Protection Tax )

3. If the first two offers are not acceptable, then “ Let the Sword Decide “. )

இன்றைய காலகட்டத்தில் முஸ்லீம்கள் மேலே சொல்லப்பட்டது போல செய்திகளை அனுப்பமுடியாது, எனவே, தான் அன்பு என்ற வார்த்தைய முஸ்லீம்கள் நம்பவில்லையானாலும் அவர்கள் “அன்பின் ” செய்தியை அனுப்பியிருக்கிறார்கள். உலகமனைத்திலும் உள்ள கிறிஸ்தவ தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இது தான், அதாவது இந்த கடிதத்திற்கு பதில் கொடுக்க நீங்கள் முடிவு செய்தீர்களானால் அல்லது இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களிடம் இதைப் பற்றி பேசலாம் என்று முடிவு செய்தீர்களானால் அப்போது இவர்களைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் படி வேண்டுகிறேன்.

இந்த அறிஞர்களின் இதயத்திலும், உள்ளத்திலும் கிறிஸ்தவர்களின் மீது திடீரென்று எரிமலை குழம்பு போல “அன்பு” பெருக்கெடுத்து ஓடியது என்ற காரணத்தால் இவர்கள் இந்த கடிதத்தை தயாரிக்கவில்லை.

“உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பொதுப்படை வார்த்தை (A Common Word between You and Us)” என்ற போர்வையின் கீழ் இருந்துக்கொண்டு, கிறிஸ்தவ நம்பிக்கையை தாக்குவதற்கு மேற்கொண்ட முயற்சி தான் இது. நிச்சயமாக நமக்கும்(கிறிஸ்தவர்களுக்கும்) அவர்களுக்கும்(முஸ்லீம்களுக்கும்) இடையே பொதுவாக எதுவும் இல்லை (There is absolutely nothing common Us (the Christians) and Them (the Muslims).

அந்த கடிதத்தில் கையெழுத்து இட்ட இஸ்லாமிய அறிஞர்களில், இரண்டு பேரைப் பற்றி எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். அவர்கள் :

1. Amb. ஆரிஃப் கமல், முஸ்லீம் இன்டலெக்சுவல், பாகிஸ்தான். (Amb. Aref Kamal, Muslim Intellectual, Pakistan )

2. நீதிபதி முஃப்டி முஹம்மத் டகி உஸ்மானி (Allamah Justice Mufti Muhammad Taqi Usmani Vice President, Darul Uloom Karachi, Pakistan)

நீதிபதி முஃப்டி முஹம்மத் டகி உஸ்மானி அவர்கள் தீவிரமாக கிறிஸ்தவத்தை எதிர்ப்பவர். இவர் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிராக பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவருடைய புத்தகங்களுக்கு நான் மறுப்பு(பதில்) உருது மொழியில் எழுதியுள்ளேன், அவைகள், “கலாம்-ஈ-ஹக்(Kalam-e-Haq) ” என்ற, மாதம் ஒரு முறை பாகிஸ்தானில் வெளியாகும் கிறிஸ்தவ உருது பத்திரிக்கையில் வெளியானது.

கடைசியாக, நான் கிறிஸ்தவ தலைவர்களை பிரதிநிதிகளை வேண்டிக்கொள்வது என்னவென்றால், இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களை நம்பவேண்டாம். இவர்களுடைய இந்த கடிதத்திற்கு நான் ஏற்கனவே அளித்த பதிலில், இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களிடம் நான் கேட்டது இது தான், “முதலாவது சௌதி அரேபியாவில் ஒரு கிறிஸ்தவ சபை( Christian Church) கட்ட அனுமதி கொடுங்கள், பிறகு சௌதி அரேபியாவில் கட்டப்படும் கிறிஸ்தவ சர்சில் நாம் அனைவரும் உட்கார்ந்துக்கொண்டு, உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள பொதுவான செய்திகளைப் பற்றி விவரமாக பேசலாம்”.

( In my very early response to this “Document”, I requested these 138 Muslim scholars to “Let Christians build a Church in Saudi Arabia. We can sit in Saudi Arabian Church and sort all the “Common Words”. )

ஆசிரியர்: பிஷப் தீமோத்தேயுஸ் நசீர் ( Bishop Timotheus Nasir )

மூலம்: http://www.pakistanchristianpost.com/newsdetails.php?newsid=1055

தமிழாக்கம் முற்றிற்று

http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/bishoptnasir/greatdeception.htm

இரத்தசாட்சியான பாலஸ்தீனக் கிறிஸ்தவர்கள்(படம் சொல்லும் செய்தி)

December 30, 2007


இரத்தசாட்சியான

பாலஸ்தீனக் கிறிஸ்தவரின் அடக்க ஆராதனையில் இயேசு மகிமைப்பட்டார் .

காஜா

நகரத்திலுள்ள உரிமையாளர் 32 வயதான ரமி அய்யத் அக்டோபர் 6ம் தேதி கடத்தப்பட்டு ,மறுநாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார் .அவருக்கு 2 பிள்ளைகள் இருப்பதுடன் அவர் மனைவி இப்பொழுது கர்பிணியாக இருக்கிறார்.ரமியின் பாலஸ்தீன பைபிள் சொசைட்டி புத்தக சாலையில் குண்டு வீசப்பட்டு சேதமடைந்ததுடன் ,தொடர்ந்து அவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருந்த 6 மாதங்கள் கழித்து இக்கொலை நடந்துள்ளது.

அய்யதின்

மரண ஊர்வலம் துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் படை வீரர்களின் அணிவகுப்பின் நடுவே காஜா நகரில் நடத்தப்பட்ட அரிய காரியமாகும்.அவரது சடலம் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் முன் பகுதியில் கிறிஸ்தவர் ஒருவர் பெரிய சிலுவையைப் பிடித்துக்கொண்டு நகரத்தின் தெருக்களனைத்தும் சுற்றிவந்தனர்.தெருக்களின் இரு பக்கங்களிலுமிருந்தவர்கள் என்றுமே கண்டிராத அந்த அரியக்காட்சியைக் கண்டுள்ளனர்.

தேவனுடைய

மகிமை அந்த அடக்க ஆராதனை ஊர்வலத்தில் வெளிப்பட்டதுடன் ,அய்யதை அறிந்திருந்த அநேக இஸ்லாமிஅயரும் அடக்க ஆராதனையில் கலந்துகொண்டதாகவும் அஹமத் என்பவர் தெரிவித்திருக்கிறார் .

ஹமாஸ்

அதிகாரிகள் கொலை செய்தவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதகவும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாரென்பதை அவர்கள் அறிந்திருந்தும் காரியத்தை திசைதிருப்புகின்றனர் என்றும் சகோதரர் அஹமத் கருதுகிறார்.முன்பு அராபத் தற்கொலைப்படைத் தாக்குதல்காரர்களை இவ்விதமாகவே கண்டுகொள்ளாமல் வளர விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில்

,ஜனங்கள் மத்தியில் பதற்றமான நிலை ஏற்பட்டு உள்ளது .காஜா நகரக் கிறிஸ்தவர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதாக அஹமத் கூறுகிறார்.இங்குள்ள சகோதர ,சகோதரிகள் கடும் உபத்திரவங்களில் அகப்பட்டிருப்பதினால் அவர்கள் ஜெபத்தில் தாங்கப்படவேண்டியது அவசியமாக இருக்கிறது.யாராவது ஹமாஸ் குழுவினர் அல்லது போலிசாருக்கு எதிராகவோ அல்லது சமதானம் மற்றும் ஜானநாயகத்தைக் குறித்தோ பேசினால் அவர்கள் காணாமற்போய்விடுவார்கள்.

அப்பகுதிகளில் சுமார்

2500 பாலஸ்தீனக் கிறிஸ்தவர்கள் இருக்கிறபோதிலும் ,பாதகமான சூழ்நிலகள் நிமித்தம் பலர் அவ்விடத்தைவிட்டு வெளிஏற விரும்புகின்றனர்.இஸ்லாமிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அநேகர் இரகசியக் கிறிஸ்தவர்களாக இருப்பதாக அஹமத் தெரிவிக்கிறார் .அது போன்றவர்களில் ஒருவர் தனது கனவில் இயேசுவைப் பார்த்து இரட்சிக்கப்பட்டுள்ளார்.இஸ்லாமியரிடையே வசிக்கும் இச்சகோதர ,சகோதரிகளுக்காகக் கிறிஸ்தவ விசுவாசிகள் இடைவிடாமல் ஜெபிப்பீர்களென்று நம்புகிறேன்.

இஸ்லாமில் இருந்து இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களின் தளம்

December 29, 2007


WebSites of Former Muslims Who Embraced Jesus Christ as their Lord and Saviour

Zak Gariba – Former Muslim Imam
http://www.gariba.org/

Mark Gabriel – Former muslim Imam, Al-azhar Islamic university professor
http://www.markagabriel.org/

Hamran Ambrie – Former Muslim Priest
http://hamran-ambrie.tripod.co/ m

Walid Shoebat – A Former PLO Islamic Terrorist
http://www.shoebat.com/

Jeremiah Fard Muhammad – Former Muslim minister
http://www.wicctv.org/

Nonie Darwish – Freelance writer and public speaker
http://www.noniedarwish.com/

Mohammad Ghazoli, Political writer in Elite Arabic news papers
http://www.ghazoli.com/

Dr. Ergun Mehmet Caner – Turkish Ex-Muslim(Dean of Liberty Theological Seminary in Lynchburg, Va)
http://www.erguncaner.com/

Reverend Donald Fareed – Iranian Ex-Muslim, Persian Ministries
http://www.persianministries.org/

Salah – Ex-Muslim Palestinian, Gospel Musician
http://www.salahjam.com/

Dr. Abraham Sarker – Bangladeshi Ex-Muslim, “Gospel for Muslims” Ministries
http://www.gospelformuslims.com/
http://www.understandmymuslimpeople.c/om

Hussain Andaryas – Afgani Ex-Muslim
http://www.hesavedme.com/

Afgan Converts WebSite
http://www.shahadat.net/

Nurudeen I. Adeojo
http://www.wohcc.org/

David Naseer
http://www.davidnasser.com/

Emir Caner – Dean of The College at Southwestern
http://www.emircaner.com/

Dr. Nasir K. Siddiki – Muslim businessman, Now Christian Preacher
http://www.wisdom-ministries.com/

WL Cati- Zennah Ministries
http://www.zennahministries.org/
http://wlcati.com/

Ahmed Abaza
http://www.hofhineministry.com/

Ajeenah El-Amin
http://www.unitedfaithnetwork.org/

Abdul Hakeem – Nur Ul alam Ministry
http://www.namindia.org/

Yemeni ex-muslims
http://www.yemen4jesus.com/

An Ex-Muslim Christian Website run by Iraqi ex-Muslims
http://www.exmuslim.com/
http://www.formermuslims.com/

Pastor Hormoz Shariat Ph.D, Scientist, Iranian Ex-Muslim, Now Christian Preacher
http://www.iam-online.net/

Rev. Majed El Shafie
http://www.onefreeworldinternational/. org

Simin – Iranian ExMuslim
http://www.isa-masih.com/

Mohammed Altaf(Now Simon Altaf) – Pakistani ex-Muslim
http://www.abrahamic-faith.com/

One Anonymous muslim
http://www.journeytojesus.com/

Jerry Rassamni – Ex-Militant, Now Christian, Popular speaker on apologetics
http://www.fromjihadtojesus.com/

Abdoul Rahim – “Building Bridges to the Truth” Ministries
http://www.buildingbridgestothetruth/. com

Paul Ciniraj Mohamed – Salem Voice Ministries
http://www.salemvoice.com/

Betsy Tan – “In Him” Ministries
http://www.visionbooks.net/

Taysir Abu Saada – Fatah Fighter and sniper
http://www.hopeforishmael.org/

Three Former Islamic Terrorists
http://www.3xterrorists.com/
http://www.2xtn.com/

Afshin Ziafet – Afshin Ziafat Ministries
http://www.afshinziafat.com/

Samina Jafari
http://www.saminabradly.com/
(or http://web.archive.org/web/200 40415084556/www.saminabradly.c om/index.html)

Rev.David Jaber
http://www.reachingmuslimsforjesus.co/ m

Dr.Steven Masood
http://www.stevenmasood.org/
http://www.jesustomuslims.org/
http://www.itl-usa.org/

Anonymous Muslim
http://www.muslims4jesus.com/

Pastor Reza F. Safa
http://www.rezasafa.com/
http://www.nejattv.org/

Elnathan Baghestani
http://www.iranforchrist.com/

Ellie Davidian
http://www.hesetsfree.org/

Daniel Shayestah
http://www.escapefromdarkness.org/

Akef Tayem
sonsofabraham.com

A Former muslim
http://www.movemegod.com/

Faisal Malik
http://www.covenantoflife.org/

Good Websites for Muslims to learn about Jesus Christ and Christian faith

http://www.muslimsseekingjesus.com/
http://isaalmasih.net/
Website: http://www.turnfromislam.com/

இஸ்மாயிலின் இயேசு

December 29, 2007

தென்னிந்திய மாநிலங்களில் ஒன் றான ஆந்திரப்பிரதேசத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் பிறந்த இவர் பெயர் இஸ்மாயில் . ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தா வர். அழகிய கிராமச் சூ ழலில் பெற்றோரின் அரவனைப்பில் செல்லமாக வளர்ந்தார் . பாசமிக்க தாயாரால் பரிவுடன் வளர்க்கப்பட்ட இவர் அர பி பாடசாலையில் திருக்குர்ஆனைக் கற்று வந்தார் . துடிப் பும் வேகமும் உள்ள இவர் தன் சொந்த ஊரி லிருந்து கொண்டே தன் பெற்றோருக்கு பேருதவிகளை செய்து வந்தார் . வாலிபமும் வந்தது . குடும்பத் தொழில் ஈடுபட்டு உழைத்துக் கொண்டிருந்தார் . பொறுப்பு ள்ள பெற்றோர் தம் மகனுக்கு நல்ல துணையை தேடித்தந்து மணமுடித்தும் வைத்தார்கள் . நல்ல கணவனாக தன் மனைவியை பாதுகாத்தார் . அன் புடன் நடத்தினார். இல்லாளும் அவரை ஏற்ற கணவனாகக் கொண்டு அன் புடன் கூடிய கனத்தையு ம் செலுத்தி வந்தாள் . அவர்கள் இல்லறம் இனிதே நிறைவேறிக்கொண்டிருந்தது .

அன்னை அன்

புக்குரி யவளாய் திகழ்ந்தாள் . தன்மகன் இஸ்மாயிலின் மேல் தன் நம்பிக்கையை யும் அன்பையும் அளவில்லாமல் வைத்திருந்தார் . கல்வியறிவு கொஞ் சமேயாயினும் தொழில் துறையில் ஈடுபட்டார்.

ஆனால் அவரது வாழ்வில் இன்னல் தொடர்ந்தது

. மனக் கவலைகள் , சோர்வுகளின் நடுவில் வாழ்ந்து வந்த அவர் ஒருநாள் கிராமத்தின் ஒரு பகுதியில் மக்கள் கூட்டமாக நிற்பதைக் கண்டு இ என்ன நடக்கிறது என பார்க்க அவ்விடம் சென் றார் . ங்கு சில கிறிஸ்தவர்கள் நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருந்தனர் .

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாரு ங்கள் ; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்

(

மத்தேயு 11 ; 28)

என அவர்கள் அறிவித்த தேவவார்த்தை அவரைக் கவர்ந்தது

. இஸ்மாயில் புதிய ஏற்பாடு ஒன்றை வாங்கி வாசிக்கலானார் . மேலயுள்ள வசனங் களை உடைய இன்ஜி லை வாங்கித்தான் படித்துப் பார்ப்போமே என்று எண்ணி அவர்களிடமே ஒன்றை வா ங்கி வாசிக்கத்தொடங்கினார் .

இஸ்லாம் மார்க்கத்தின் பாரம்பா

ரிங் களைப் பின்பற்றி காலமெல்லாம் அரபி வார்த்தைகளையே சொல்லி ஐந்து வேளை தொழுகை செய்து புரியாத பாஷையில் ஓதுகிற குர்ஆன் வாசக ங்களை அர்த்தம் தெரி யாமலேயே படித்து வந்த அவருக்கு புதிய ஏற்பாடாகிய இன்ஜீ லைப் படிக்கும்போது புதிய விதமாகத் தோன்றிற்று . அதை வாசிக்க வாசிக்க இஸ்மாயிலுக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் நம்பிக்கை யு ம் உண்டாயிற்று . வேதாகமத்தை கற்றுக்கொண்ட அவர் இயேசு கிறிஸ்துவே அல்லாவை அடைய அவருடை வழி , இயேசு ஒருவரே பாவமன்னிப்பை அருளுகிறவர், கிறிஸ்து இயேசுவைப்பின்பற்றுவதே வாழ்வின் மேன்மைக்கு வழி என்பதை அறிந்து, தன் பாவ ங்களை உணர்ந்து கிறிஸ்துவிடம் அறிக்கை செய்து பாவமன்னிப்பை அடைந்து கிறிஸ்துவின் அடியார் ஆனார் . இனத்தாரும்,பெற்றோ ரும் இஸ்மாயில் இயேசுவைப் பின்பற்றுகிறார் என்று அறிந்தனர் . இஸ்லாமிய கொள்கைக்கு திருப்பிவிட வேண்டும் எனத் தீர்மானித்து அவ்வப்போது தொல்லை கொடுத்து வந்தனர். எனினும் இஸ்மாயில் கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றும் விசுவாசத்திலிருந்து நழுவவில்லை. ஒளிந்து மறைந்து வேதம் வாசித்து ஜெபித்து வந்தார் . துணைவி பல சமயங் களில் இஸ்லாமியக் கதைகள் , போதனைகளைச் சொல்லி வருவாள். ஆனாள் இஸ்மாயில் எதையும் கருத்தில் கொள்ளாமல் குடும்ப வேலை ,மனைவியை விசாரித்தல் ,வேதவாசிப்பு ஜெபம் இவைகளைத் தொடர்ந்து செய்து வந்தார் . கிறிஸ்தவ விசுவாசத்தில் ஊறிப்போன கணவணோடு வாழபிடிக்காத மனைவியும் இவரை விட்டு பி ரிந்து சில ஆண்டுகள் தன் பெற்றோ ர் வீட்டிற்கு போய் அங்கேயே இருந்துவிட்டாள் . தனித்து வாழ்வதில் அவளுக்கு வேதனைதான் என்றாலும் கணவணின் கிறிஸ்தவ விசுவாசம் அவருடன் வாழக்கூடாதபடி அவளைத் தடுத்தது .

மனம் உடைந்த மனைவியின் நிலை ஒரு பக்கம்

,விசுவாசத்திற்காக மனைவியை பி ரிந்து வாழும் கணவன் ஒரு பக்கம் ,போராட்டம் பி ரிவு ஆகியவை தொடர்ந்தது . இருவருமே வேதனையில் காலம் கழித்தனர் . மனைவியை வாழவைக்கத் தெரி யாதவன், கல் நெ ஞ்சன் இரக்கமற்ற அரக்கன் என்றெல்லாம் உற்றா ர் உறவினர்களால் தூற்றப்பட்டார். இஸ்மாயில் எல்லாவற்றையும் மனதில் வைத்து ஆண்டவர் இயேசுவின் திருசன்னதியில் சொல்லி ஜெபித்து வந்தார் . சோதனைகளின் போது சோர்வு ஏற்பட்டாலும் இரட்சகரைப் பின்பற்ற தய ங்கவில்லை . தொடர்ந்து தன் பிரச்சனைகள ஆண்டவா ரிடம் சொல்லி ஜெபித்துக் கொண்டிருந்தார் . ஆண்டவரும் அவர் ஜெபத்தை கேட்டார் .

ஊராரும் உறவினர்களும் ஒன்று இவர்களை இணைத்து வைக்க வேண்டும் அல்லது விவாகரத்து செய்யவைத்து அப்பெண்ணுக்கு மறுமணம் செய்து வைக்கவேண்டும் எனத்தீர்மானித்னர் . அதன்படி அப்பெண்ணை அணுகி நீ இந்த மனிதனுடன் வாழ்கிறாயா அல்லது விவாகரத்து செய்து கொண்டு வே றொருவனுக்கு மனைவியாகி வாழவிருப்பமா ? என்று கேட்டுவிட்டு ,இஸ்மாயிலுடனே வாழ விருமப்பமென்றா ல் இருவரையும் சமுதாயத்தை விட்டு ஒதுக்கி வைத்து விடுவிதாக என்றனர் . ஒருவரை மனதிலும் வாழ்விலும் கணவனாக ஏற்றுவாழந்து சூழ்நிலைக் கா ரனங்களினால் வேறொருவரை மனதில் ஏற்று அவருக்கு மனைவியாய் வாழ்வதை கற்பணையிலும் விரும்பாத அவள் இஸ்மாயிலுடனே வாழ விரும் புதாக தன் விருப்பத்தை அவர்களிடம் தொரி வித்தாள் . எனவே உறவினர்களும் ஊராருமாக சேர்ந்து இஸ்மாயிலை யும் அவரது மனைவியையு ம் இணைத்து வைத்தனர் .

ஏற்கனவே தீர்மானித்தபடி சமுதாயத்தைவிட்டு இஸ்மாயிலை

யும் அவரது மனைவியை யும் பிரித்து வைக்க முற்பட்டனர் . இஸ்மாயிலின் தாய் துயரமடைந்தாள் . மதம் என்ற பெயா ரால் பெற்ற மகனை பிரிய வேண்டிய கொடுமையை நினைத்து பதைபதைக்கிறது தா யுள்ளம் காப்பாற்ற விடாமல் மதவெறியர்களால் துரத்தப்படுதல் கண்டு உள்ளம் வாடுகி றாள் மகனுக்கும் எந்த நம்பிக்கை யும் இல்லாமல் என்ன நடக்குமோ எனத் தெரியாமல் புரியாமல் திகைத்து நிற்கதியாய் நிற்கும் மனைவிக்கும், என்ன உதவி செய்வது என்று புரியாமல் திகைத்தாள்.

அன்

பு பாசம் பற்று வாழ்வு என்ற வார்த்தைகளுக்கு அர்த்தந்தெரியா இந்த மத வெறியர்களுக்கும், மன மாற்றத்தை விள ங்கிக் கொள்ளத் தெரியாத இவர்கள் கணவன் என்றோ மகன் என்றோ பாராமல் நேரே தூக்கு மேடைக்கு அனுப்பிவிடுவார்கள் இந்த புண்ணியவான்கள் . இவர்களுக்கே மதமே முக்கியம் மனித இதய ங்களல்ல, மதம் மாறிவிட்டானா ? கொல்லு அவனை இல்லாவிட்டால் துரத்து ஊரைவிட்டு இதுதான் இவர்களின் பரம்பரை உரிமைச் சொத்து , இதுதான் மதம்,அல்லது வெறித்தனம்.

பிரிக்கப்போகிறதே மதமும் கொள்கை யும் தன் மகனை என்றாரிந்த தாயின் புலம்பலை அலறலை யாரும் கவனிக்கவுமில்லை,கருத்தில் கொள்ளவும்மில்லை .இஸ்மாயிலையும், அவரது மனைவியையும் ஊரை விட்டு வெளியேற்றினார்கள்.உடுத்திய துணியுடன் வெறும் கையாய் ஊருக்கு வெளியே இராத்தங்கினார்கள் .பசி, குளிர்,தனிமை, விசுவாசத்திற்காக தாயன்பையும் இழந்து காட்டு ஜீவன்களுடன் இராத்தங்கினார்கள்.பல இரவுகளை இப்படியே கழித்தனர் .மனைவி தன் நிலையை குறித்து எண்ணி மனதிற்குள்ளேயே புலம்பிக்கொண்டிருந்தாள் .இஸ்மாயிலின் தேவன் தங்களை காப்பார் என்ற விசுவாசம் இவளுக்கு இல்லை. இவளோ இன்னும் மனந்திரும்பாதிருந்தாள்.பசிக்கொடுமை தாங்காமல் நாம் இப்படியே மயங்கிவிழுந்து மரித்துவிடுவோம்என்றாள் ,அவரோ ஈஸாமஸீஹ் நம் இன்னல் களைவார்,ஆகாரம் தருவார்என்றார்.அவளால் நம்ப முடியவில்லை . அக்கிராமத்தைச் சேர்ந்த இந்து நண்பர் ஒருவர் இவர்களை குறித்து கேள்விப்பட்டு அவர்கள் மேல் பரிதாபப்பட்டு ஆகாரம் கொண்டுவந்து கொடுத்தார் , அவர்கள் பசி நீங்கி இளைப்பாறினர்.ஒரு நாள் காலையில் கணவனிடம் அந்த சகோதரி எனக்கு ஒரு உண்மையை சொல்ல வேண்டும் எனக் கெஞ்சினாள் .என்ன ? என்றார் இஸ்மாயில்.அவள் மைஹோனா ? ஈஸா ஹோனா?(நான் வேண்டுமா ? இயேசு வேண்டுமா?)என்றாள் .

பிரிய மனைவியே

இயேசுவும் வேண்டும் நீயும் வேண்டும்அப்படியானால் எத்தனை நாட்கள் இப்படியே சாவது?இல்லை ஈஸா காப்பாற்றுவார் ,அவரை நம்பு.

ஆனால்

ஈஸாவை அவளால் நம்ப முடியவில்லை.அல்லாஹ் தனக்கிழைத்துவிட்ட இந்த இன்னலில் இருந்து தப்பிக்கவும் வழியில்லை .இருதலைகொள்ளி எறும்பாக வாழ்வதைக் காட்டிலும் விஷம் அருந்தி சாகலாம்என்று எண்ணி சாக தீர்மானித்தாள் .எப்படியோ விஷத்தையும் ஆயத்தப்படுத்திவிட்டு ஒரு நாள் மாலையில் அதை அருந்தினாள் .

பயமும்

,திகிலும் அவளை ஆட்கொள்ள, வேறு வழியில்லாமல் விஷம் அருந்திவிட்டதை கணவனிடம் கூறினாள்.மிகுந்த அமைதியுடன் ஆண்டவரை நோக்கி ஜெபித்தார் இஸ்மாயில் .

என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்“(யோவான் 11;25)

என்றீரே

.அவள் உம்மை விசுவாசிக்கவில்லை, நான் விசுவாசிக்கிறேன்.அவளை எழுப்பும் ஆண்டவரே எனக் கெஞ்சினார் .தண்ணீரை ஜெபித்து த மனைவிக்கு குடிக்க கொடுத்தார். அவளோ முடியாது என்று மறுத்தாள்.அங்கு சிலர் தற்செயலாய் இந்த காட்சியை கண்டு அக்கிராமத்தில் இருந்த சிறிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .3 நாட்களாகியும் எந்த மாற்தலுமில்லை. மிகவும் களைத்து போய் நித்திரை செய்வது போல காணப்பட்டாள்.அவள் கொஞ்சம் மயக்கம் தெளிந்த போது தண்ணீரை ஜெபித்து கொடுத்தார் நீ சாகமாட்டாய் பிழைப்பாய், என் இயேசு உன்னை என்னிடமாய் திரும்பக் கொடுப்பார்.ஜெபித்த தண்ணீரை அவளை குடிக்க செய்தார் .சில வினாடிகளில் கடும் வாந்தி எடுத்து விஷம் எல்லாம் வெளியேறிற்று. அல்ளேலூயா!அவள் பிழைத்துக்கொண்டாள். இயேசுவுக்கே மகிமை.

ஊரார் இதைக்கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார்கள்

.இஸ்மாயிலின் இயேசுவே உண்மை தெய்வம் எனக்கருதினார்கள் .இவர்களை வாழவைக்க வேண்டும் என தீர்மானிக்க கூட்டம் நடந்தது .”இவர் வணங்குகிற (ஈஸா )இயேசுவைப் பற்றி நமக்கு சொல்லி தரவும்,இங்கு வீயாதிப்படுகிறவர்கள் இவர் மூலம் இயேசுவின் அருளால் சுகம் பெற்று வாழ்வதற்கும் அவர்களை இங்கேயே வைக்கவேண்டும் .அவர்கள் பிழைத்துக்கொள்ள வழி உண்டாகும்படி கொஞ்சம் நிலம் கொடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது .அதன் படி 15 சென்ட் நிலமும் ஓலையினால் வேயப்பட்ட சிறுவீட்டையும் ,ஆயத்தப்படுத்திக் கொடுத்தார்கள்சிறிது நாட்களுக்குப் பின் அவர் மனைவி இயேசுவை உண்மை ஆண்டவர் என அறிக்கையிட்டு கிறிஸ்துவுக்குளானாள் .அங்கு வரும் வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்தார்கள். மீதி இடத்தில் தோட்டம் போட்டு தங்கள் எளிய குடும்பத்தை நடத்தினார்கள்.

படிப்படியாக ஆண்டவர் அவர்களை ஆசீர்வதித்தார்

.இஸ்லாமியர்கள் தொடர்ந்து அவருக்கு இன்னல்கள் இழைத்தார்கள் .ஆண்டவரோ அவர்கள் எண்ணங்களை மாற்றிவிட்டார். கிராமங்களில் சுற்றி நடந்து இயேசுவைப் பிரசங்கித்தார்.வியாதியஸ்தர்கள் சொஸ்தமானார்கள் ;அற்புதங்களை தேவன் நிகழ்த்தினார்;தம் பிள்ளைகளின் பாடுகளை ,கண்ணீரையும், விசுவாசத்தயும் அறிந்த தேவன் ஆத்துமாக்களை இராட்சிக்கத் தொடங்கினார்கள்.

க‌ண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீராமாக அறுப்பார்கள்“(சங் 126;5)

இன்று அவர சபையில் இருநூறுக்கும் மேற்பட்டாவர்கள் இரட்சிக்கப்பட்டுள்ளனர்

,அவ்விடத்தில் பெரியதோர் ஆலயத்தை கட்டியுள்ளார் .இஸ்மயில் குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக .

பாஸ்டர்

.இஸ்மாயில்

அனந்தபூர் மாவட்டம்

ஆந்திரப்பிரதேசம்

.

(

காபாவில் இருந்து கல்வாரிக்கு)

சுவிசேஷ ஊழிய நூல் நிலையம்

95‍A

,வேப்பேரி நெடுஞ்சாலை,

சென்னை‍‍‍

;7

ஈரானில் முஸ்லிம்களால் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்கள்

December 29, 2007


ஈரானில் அதிகமான முஸ்லீம்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.இதை பொருக்க முடியாத முஸ்லிம்களால் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை இப்பொழுது அதிகமாகி வருகிறது.
Iran Authorities Whipping Christian Couple For “Apostasy”, Investigators Report

By BosNewsLife News Center

TEHRAN, IRAN (BosNewsLife) — An Iranian Christian couple have been punished by whipping for “apostasy” from Islam in a case that has underscored concerns about widespread persecution of Christians in Iran, a well-informed advocacy group said Tuesday, November 6.

Barnabas Fund, which has close ties with reportedly persecuted Christians in predominantly Muslim nations, told BosNewsLife that “six officials”, most likely of the feared religious police, visited the couple’s home in September to carry out the punishment. Their names were not released, apparently because of security concerns.

“The husband is indeed a former Muslim, who became a Christian many years ago, but the wife was born into an Assyrian Christian family and has never been a Muslim,” Barnabas Fund explained.

It said charges against them were linked to their marriage seven years ago. The couple married under Islamic Law because they apparently could not find a church willing to marry them because of their different backgrounds. The Justice Court of Revolution said that “when non-Muslims marry under Islamic law they are considered to have converted to Islam.

PRACTISING CHRISTIANS

“They allegedly violated that principle because “in reality they are convinced and practising Christians,” Barnabas Fund explained. In September 2005, “the couple were among a group of Christians who were arrested while meeting for worship in a home in a town north-west of Tehran,” Barnabas Fund said.

In July this year the couple’s case came to court where they apparently admitted they were Christians. “Because the law considered them Muslim, this led to the court’s ruling that they were both apostates from Islam, and hence the brutal punishment.”

These are no isolated cases, BosNewsLife learned. Despite the dangers, Iranian Christians staying outside the country plan to return, BosNewsLife learned. The Iranian Church Netherlands said last week it plans to train 4,000 Iranian Christians who fled their country to return to Iran to preach the Gospel.

There are an estimated 40,000 Iranian exiles living in the Netherlands. (With reporting by BosNewsLife’s Eric Leijenaar and Stefan J. Bos).

Copyright 2007 BosNewsLife. All rights reserved.
This material may not be published, broadcast, rewritten, or redistributed without our prior written consent.

இயேசுவின் அடியானக மாறிய முகமது

December 29, 2007


முகமது ;

நைஜீரியா நாட்டில் மந்தை மேய்ப்பனாக இருந்த இவர் குறிப்பிடத்தக்க சில தொடர்ச்சியான சொப்பனங்களின் மூலம் இயேசுகிறிஸ்துவின் ஆழமான அன்பையும் அவருடைய தெய்வீகதுவத்தையும் கண்டு அவரின் முழுவாழ்க்கையை இயேசுவுக்காய் அர்ப்பணித்தார் .இதனால் கடும் கோபமுற்ற இவரின் தந்தை இவரை பலமுறை கொல்ல துணிந்தார்.ஆனால் இறை அருளால் காப்பாற்றப்பட்ட இவர் கிறிஸ்துவின் அன்பை இவரின் இஸ்லாமிய தகப்பனுக்கும் காட்டி அவரையும் கிறிஸ்துவின் அடியாராக மாற்றிவிட்டார் .இதை பற்றி முழுமையாக அறிய கீழே தொடரவும்.

Mohammed
(Nigeria)

Mohammed grew up in a Fulani tribe and started rearing cattle when he was six years old. He did this for almost 10 years until he went to an Arabic school to study the Qur’an. Prior to this, Mohammed had learned about Islam from his father.

After several years of schooling, he returned home. One night he had a frightening dream. He saw people along the roadside who were suffering. He entered a gate and people took him and beat him. Then he was locked in a room that was very hot. It was so hot that his flesh began to peel off his body. As he began screaming and trying to kick the door open, he woke up. He couldn’t sleep for the rest of the night. The next night, he had another dream. This time he was on a different road and he saw decaying bodies. He came to the same gate, was beaten and taken to the same room. His flesh was melting off his body when a man dressed in white appeared. Suddenly, the room became cold and the people who were beating him disappeared. The man stretched his hand out and held Mohammed’s hand, saying, “My son, what are you doing here? Do you want me to take you home?” Mohammed says, “Within a second I was back home and he said to me, ‘I love you, my son.’”

Two weeks later, Mohammed had a third dream. He was in the bush and there was a deep hole in front of him and he didn’t know how to cross it. When he looked into the pit he became scared and thought he would probably fall in and die. He saw a man dressed in black walking quickly. This man told him that a lion was coming behind him (Mohammed) and that he should jump over the pit before the lion reached him. Mohammed could hear the lion’s roar. Just as he was about to jump, the man in white from his previous dream appeared in front of him and asked, “My son, where are you going?” The man in black disappeared and the lion’s roar stopped. Mohammed told the man in white that he was going home. He asked Mohammed if he wanted help. The man in white stretched his leg across the whole pit. As he did this, the hole closed and he told Mohammed to cross over and go home. When they were close to Mohammed’s house, the man said, “I love you, my son.”

For the next six nights, Mohammed had similar dreams. Each time, he saw himself in different places and, regardless of where he was, the same man in white came and helped him. In the last dream (dream #9), Mohammed was sitting under a tree reading books that he couldn’t understand. The man in white (Jesus) was sitting beside him. He asked Mohammed what he was reading and Mohammed told him that he was trying to acquire knowledge. Jesus asked Mohammed if he wanted help and told him that he could show him specific things to read. Jesus took a book and said, “This book comes from the Lord and it has the message of God inside of it. In this book, I will show you verses which will help you.” Jesus read scriptures to Mohammed, including John 14:6, which says, “I am the way, the truth and the life. No one comes to the Father except through me.” He explained this to Mohammed and told him that He was the way and the Savior of the world. Jesus also told him that he would face many trials after becoming a Christian. He told Mohammed He wanted to be his Savior and explained that He was the man in Mohammed’s dreams, the man who had rescued him. When Jesus told Mohammed he wanted to give him salvation, and asked, “Do you accept?” Mohammed said yes and Jesus disappeared.

The next day Mohammed went to meet a Christian acquaintance to tell him about this dream. This friend introduced him to some young men from another church and they led Mohammed to Christ. He told his parents that he was now a Christian. After several months, Mohammed’s father forced him to drink poison. He ordered men in the village to surround Mohammed so he couldn’t escape. Interestingly, two days earlier Jesus had appeared to Mohammed and told him that whatever difficulties he faced, He would make a way for him. Mohammed asked his father if he could pray before he swallowed the poison. He prayed, swallowed the poison, and went to bed. The next morning, to his father’s dismay, Mohammed was still alive. Later, his family tried to kill him by shooting him with a poisoned arrow. He spent a month in the hospital, but he survived this experience as well.

After these attempts to end his life, his family tried other tactics to persuade him to leave Christianity. His father gave him a hundred cows and told him he could have three wives if he were to abandon the Christian faith. Eventually, Mohammed made his choice – but it was to leave the family home. He thanked his father for the cows and the offer of three wives and said, “You still have not met the needs that Jesus promised to meet. If you promise and agree to meet those needs, fine. Do you have means of giving me life forever?” His father said no. Mohammed told his father since he couldn’t provide eternal life, there was no way that he could leave Jesus Christ.

A few years later, while on his deathbed, Mohammed’s father asked Mohammed for forgiveness and said he was ready to receive Jesus as his Savior. Mohammed led his father in the sinner’s prayer and three hours later, his father died. On one hand, the passing of his father was a sad event, but on the other hand, it was cause for rejoicing. Not only had father and son been reconciled with each other before Mohammed’s father left this world, but he left this world in peace, knowing that in the world to come, he would be with Jesus for all eternity, and—at some future date—be with his son again in heaven.

http://morethandreams.org/mohammed.html

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட முஸ்லீம் இமாமின் மகள்

December 29, 2007

ஒரு பிரிட்டிஷ் இமாமின் மகள் கிறிஸ்துவராக ஆனபின்னால், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு

ஒரு முஸ்லீம் இமாமின் 32 வயதான மகள் கிறிஸ்துவத்துக்கு மதம் மாறினார். அவருக்கு உயிருக்கு ஆபத்து என்பதாலும் அவருக்கு அவரது குடும்பத்திலிருந்தே மிரட்டல்கள் வருவதாலும் அவர் மறைந்து வாழ்கிறார்.
அவரது உயிரை காப்பாற்ற போலீஸ் அவருக்கு பாதுகாப்பு தருகிறது

இங்கிலாந்திலேயெ மதம் மாறிய ஒரு 32 வயதான பெண்ணின் நிலை இப்படி!

British imam’s daughter under police protection after converting to ChristianityRuth Gledhill, Religion Correspondent of The Times

A British imam’s daughter is living in fear of her life under police protection after she received death threats from her family for converting to Christianity.

The young woman, aged 32, whose father is a Muslim imam in the north of England, has moved house 45 times to escape detection by her family since she became a Christian 15 years ago.

Hannah, who uses a pseudonym to hide her identity, told The Times how she became a Christian after she ran away from home at 16 to escape an arranged marriage.

The threats against her became more serious a month ago, prompting police to offer her protection in case of an attempt on her life.

She was speaking on the eve of the launch of a new charity in London today to promote greater religious awareness. Muslims in Britain who wish to convert to Christianity are living in fear of their lives because of Islamic apostasy laws, a senior Church of England bishop will warn at the invitaton-only launch in west London.

The Bishop of Rochester, Dr Michael Nazir-Ali, will claim “freedom to believe” is under threat in Britain because of Islamic hostility to conversion.

Hannah, now employed in multi-faith youth work and who gives talks to churches on Islam, is the daughter of a Lancashire imam whose seven other children are demanding she return to Islam. She has been in hiding,

since her home was attacked by a group of men armed with knives, axes and hammers, in 1994. She will describe today how she is in fear of her life after the death threats against her were recently renewed.

She said: “I left home and I had nowhere to go. My religious education teacher gave me somewhere to live. Even though she tried to make me stay at home on Sundays, I am quite rebellious by nature and I started to go to church with her out of curiosity.”

She said she had been in hiding, on and off, ever since, and has now been given a telephone number she can call for an instant response by police should she need help. The latest threat was a text message from one of her brothers, warning he could not be responsible for his actions if she did not return to Islam.

Hannah said she was looking forward to getting married so she could change her name and escape detection by her family. Not all Muslims in Britain are this extreme, she believes.

“It is representative of some Muslims. I know the Koran says that anyone who goes away from Islam should be killed as an apostate so in some ways my family are following the Koran. They are following Islam to the word. But I do not think every Muslim would actually act on that.”

Earlier this year, a Policy Exchange study found that 36 per cent of British Muslims aged between 16 and 24 believed those who converted to another religion should be punished by death.

Dr Nazir-Ali will speak out on behalf of Hannah and others suffering persecution for their beliefs in the UK at today’s launch of Lapido Media, a new charity which is seeking to promote “religious literacy” in world affairs.

The Bishop is expected to describe how sharia law in many countries, including parts of Britain, punishes apostasy with death and is viewed as treason by theocratic governments. Dr Nazir-Ali will call on society to offer greater protection, by increasing understanding of what makes people vulnerable.

Pakistan-born Dr Nazir-Ali, who has a Christian and Muslim background, is patron of Lapido Media, funded by donations and trusts including the Jerusalem Trust. The word ‘lapido’ means ‘to speak up for’ in the Acholi language of Northern Uganda. The charity has been named in honour of the courage of Acholi church leaders who campaigned for an end to a little-reported 20-year war there, involving the abduction of 25,000 children.

இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட இந்தோனேஷிய இஸ்லாமிய பெண்

December 29, 2007

டினி

(இந்தோனேஷியா);குடும்பத்தாலும்,நண்பர்களாலும் ,மற்றும் சமுதாயத்தாலும் ஓரங்கட்டப்பட்ட ஒரு இந்தோனேஷியா இஸ்லாமிய இளம் பெண் இயேசு கிறிஸ்து தன் கனவில் தோன்றி காட்சி அளித்த அந்த இரவே கிறிஸ்தவளாக மாறினாள் .அந்த விசேஷித்த இரவு (லைலாத்துல் குதார்)lailatul qadar ஆகும் .அப்பொழுது முஸ்லீம்கள் அல்லாவிடத்தில் தனிப்பட்ட விதத்தில் தங்களது ஜெபங்களை ஏறெடுப்பார்கள்.அவள் இயேசுவை கண்ட அந்தநிமிடம் முதல் அவருடைய சமாதானம் அவளது இதயத்தை முழுவதும் நிரப்பியது.உபத்திரவங்கள் தொடங்கியபோதும் அந்த சமாதானம் நிலைத்திருந்தது .

Dini
(Indonesia)

As the oldest child in her family, twelve-year-old Dini had always been close to her father; so when he died suddenly, she was devastated. Her devastation turned to anger when she learned that her father had an affair with her aunt who was now pregnant. She also learned that her mother was pregnant from her father.

As a struggling widow, Dini’s mother decided to place her three youngest children in an orphanage. She also had to sell valuables in the house just so the family would have money to buy food. About four years later, a relative told Dini that her mother was getting remarried. Dini was very hurt by this and didn’t understand why her mother hadn’t told her. She felt like she didn’t have anyone she could depend on since her father had disappointed her, and now her mother had done the same.

Dini became friends with the troublemakers at school and went through a rebellious period. She skipped classes, didn’t wear the school uniform and got into fights. When several of her friends faced serious problems, Dini began to ask questions: “What is it that I’m looking for? Religious rules don’t make me happy. But a free life without the rules of religion isn’t something I want either.”

The month of Ramadan arrived and Dini became diligent with the religious practices of fasting and prayer. One night, during Ramadan, she decided to pray the tahajud prayer. The tahajud prayer is not one of the five required daily prayers. It is only done at midnight and, in particular, it includes petitions that ask God for signs. Dini set her alarm clock and woke up to pray. She says, “I had such strong faith that whatever I asked God for that night, God would listen and give His answer.” At the end of the prayer which she had memorized, she cried out to God and said, “God, I am confused. I’m very confused about the way to meet Your approval.” She continued, “God, if you wish for me to live life within your demands, then tonight show me the right path. If you do not show me, God, then let me live life the way I want. I won’t ever again care about the rules of religion. And if I die, don’t send me to hell. I didn’t know what was right! It wouldn’t be fair for me to go to hell, God. You never showed me the right way. What I want, God, is to be shown the right path tonight. I will live my life the way you appoint it.”

A bright light then appeared and she saw a figure standing in front of her. The man was wearing a white robe but she couldn’t see his face clearly. She doesn’t know how but she realized that the figure was Isa. He said, “Follow me,” and she was confused and thought, “Lord, I am a Muslim. How can I follow you?” She asked several other questions as she wondered how she could follow the God of the Christians. She heard another voice saying, “You can’t possibly follow Him. Forget your prayer! Forget the intention of leading a good life!” When she looked at the man in white, she felt calm and peaceful. Jesus continued to say, “Follow me,” as He stretched out His hand. Dini struggled over her decision but finally she said, “God, if this is the way of truth, okay. I want to follow you.” The moment she said that, she felt as if ice was pouring over her chest. At the same time, she felt a peace she had never experienced before. She says, “I felt something extraordinary inside my heart.”

After Dini became a Christian, she experienced persecution from her family. She was just 17 years old when they forced her to leave home. She attended boarding school and supported herself through part-time jobs. She also pursued reconciliation with her family. While showing respect for the Javanese traditions, she didn’t back down on her unwavering commitment to Christ. The greatest test for her was forgiving her deceased father and accepting her half-brother, born out of wedlock to her aunt. When his mother could no longer take care of him, Dini embraced her half-brother as her own.

She continues to live as an example of one who can “do all things through Christ who strengthens” her.

http://morethandreams.org/dini.html


Follow

Get every new post delivered to your Inbox.